சனி, 31 டிசம்பர், 2016


WELCOME  2017 
HAPPY NEW YEAR 
 Premnazeer   01-01-2017.


பொய்த்தது  பருவம்! 



பொய்த்தது  பருவம்...
பணமும்  செல்லாக்காசாய்!
வீழ்ந்தது பொருள்... ஆதாரம்!

வற்றிய ஆறும், வாய்காலும்...
வறட்சியின் உக்கிரம்.

நட்ட நாற்றும், கதிர்களும்
கருகும் அவலம்...
கழனிகளின் கதி!

உழவன் வயிற்றில் அனல் கொதிப்பு
நிலத்தின் வெப்பத்தை விட....

சேற்றில் இறங்கி,
சோறு படைப்பவனுக்கு
கஞ்சிக்கே கதியற்ற நிலை!

வெம்மிய   இதயம்,
வெடித்து அடங்குது
வயல்வெளிப் பரப்பில்....
விவசாயம் வீழ்ந்த வேதனையில்.....

வாடிய பயிர்களை கண்டு
வாடினேன் என்ற
வள்ளலார் போல்
இங்கு யாரும் இல்லை
 
பெப்சியும் கோலாவும்
இன்ன பிற
பிட்சா - பர்கர் போதும்,   என

நாட்டை ஆள்பவர்களும்
நதி நீர் பங்கீட்டில்....
வாக்கு வங்கி
ஆதாய கணக்கில்.....

இயற்கையை அழித்தோம்,
இன்னும் இருப்பதையும்...
சுரண்டி சுருட்டுவோம்... என

காசே தான் கடவுளடா
என,  காலில் வீழ்ந்து
அரசியல் வியாபார,
லாப நஷ்ட, கூட்டல் கழித்தலில்...

வீழ்கின்ற
விவசாயின் பிணங்களுக்கு
விலை தர வருவார்கள்
புகைப்படக் காரர்களுடன்

விழா எடுத்து
வறட்சி நிவாரணமும்
வரிசையில் நிறுத்தி,  தருவார்கள்...
கொண்டாட்டமாய்!

ஏதோ இவர்கள், அப்பன்
வீட்டு சொத்திலிருந்து
தருவது போல....

மண் இல்லா
விண்வெளி-ஆராய்ச்சி மய்யத்தில்,
கீரையை பயிர் செய்து உண்கிறான்

கார் பொய்த்த விவசாயத்தை...
கவலையோடு சிந்தித்தால்...
இவ்வளவு விவசாயிகளின்
பிணங்கள் விழாது.

இந்தியா ஒரு விவசாய நாடு!
ஆம்! இந்தியா ஒரு விவசாய நாடு!!
சொல்லிப்
பெருமை பட்டுக்கொள்ள மட்டும்.
     -பிரேம்நசீர். 31-12-2016. 






























கடந்து போன கார்மேகங்கள்.....

செவ்வானம் அடங்கிப் போன
கடும் இருளில்.......
மீண்டும்.....

கதிரவனின் 
பொன்னிறக் கீற்று
நுரை பொங்கும்
கடல் அலைகளுக்கு
அப்பால்,

கீழ் வானில்...
நம்பிக்கை - விடியலின்
வெளிப்பாடு!
கொஞ்சம்...கொஞ்சமாய்...உயர
ஆதவனின் அழகு!

கடும்... வெப்பத்தின் முனைப்பு
காரிருளை விழுங்கியபடி
அதிகாலையின் அற்புதங்கள்!

வெப்பம் தணிந்திருந்த 
இரவின் குளிர் காற்று
இதமாய்...
இன்னும் சில
மணி நேரங்களுக்கு மட்டும்!

பச்சை பசேலென
அசைந்தாடும் செடி கொடி....
மரங்களின் இலைகள்...
இயற்கையின் இன்முகங்கள்,

கதிரவனின் கடும் வெப்பத்தை
தன் நிழல் - யில்  மறைக்க
வாடி வதங்க தயார் நிலையில்!

இடம்பெயரும்  வெண்மேகங்கள்....
கார்மேகங்கள்  ஆகாதோ
பெரும் மழையாய் பொழியாதோ,   என...   
வயல்வெளியில்....காத்திருப்பில்....
கழனிவாழ் உழவன்!

மழை...வருமா  என வாட்டத்தில்
அசைவற்ற நாற்றுப் பயிர்கள்...
தன் உயிர் தண்ணீர்  தாகத்தவிப்பில்......
        - பிரேம்நசீர்.  31-12-2016. 







வெள்ளி, 30 டிசம்பர், 2016

விலகா மய்யப் புள்ளி....
உன் நினைவுகள்.....என்னுள்
நிழலாடும் போது,
நிழலாய் நீ வந்தாய்
நினைவுகளில் நனைந்தபடி,

நீர் என்று  நான் நினைத்தேன்,
கானல் நீராய் ஆகிப் போனாய்.

என் நினைவுகளுக்குள்
நிண்டிக் கொண்டிருக்கும்...
நீ இல்லாமல் வாழ்கிறேன்
உன்னை நிழலாய்
என் கண்களுக்குள்
நிறைத்தப்படி.

எல்லாமே கடந்துப் போகும்,
ஆம் காலம் தான் முதலில்!

விட்டதைப் பிடிக்க,
அடுத்த வண்டிக்கு
காத்திருக்கவில்லை,
முதல் வண்டியை
தவற விட்டப் பின்.

பயணம் தொடர வில்லை!
திசையும் மாறவில்லை!

மெல்ல ஊர்கிறேன்.........
உன் நினைவுகளைத்
தொடர்ந்து,  வட்டமாய்.....
உன்னை மய்யப் புள்ளியாக்கி.......
உன் விலகலை வட்டமாக்கி,
அதில் பயணிக்கிறேன்.

எல்லா கோணங்களிலிருந்தும்
தொலைவுகள்  நீண்டாலும்,
வட்டம் மாறாது
நீயே, மய்யப்புள்ளியாய்!
-பிரேம்நசீர். 30-12-2016.









சனி, 20 ஆகஸ்ட், 2016



அழகிய தமிழ்மகள் !

அழகிய தமிழ்மகள் !
விழியால் 
மொழிபேசும்...மௌன 
முகத்தில்...
அகத்தின் கவிதைகள் ஆயிரம்....
மெல்லிய அதிர்வலையாய்...
அழகு பாடுது.
- பிரேம்நசீர்.