சனி, 31 டிசம்பர், 2016

கடந்து போன கார்மேகங்கள்.....

செவ்வானம் அடங்கிப் போன
கடும் இருளில்.......
மீண்டும்.....

கதிரவனின் 
பொன்னிறக் கீற்று
நுரை பொங்கும்
கடல் அலைகளுக்கு
அப்பால்,

கீழ் வானில்...
நம்பிக்கை - விடியலின்
வெளிப்பாடு!
கொஞ்சம்...கொஞ்சமாய்...உயர
ஆதவனின் அழகு!

கடும்... வெப்பத்தின் முனைப்பு
காரிருளை விழுங்கியபடி
அதிகாலையின் அற்புதங்கள்!

வெப்பம் தணிந்திருந்த 
இரவின் குளிர் காற்று
இதமாய்...
இன்னும் சில
மணி நேரங்களுக்கு மட்டும்!

பச்சை பசேலென
அசைந்தாடும் செடி கொடி....
மரங்களின் இலைகள்...
இயற்கையின் இன்முகங்கள்,

கதிரவனின் கடும் வெப்பத்தை
தன் நிழல் - யில்  மறைக்க
வாடி வதங்க தயார் நிலையில்!

இடம்பெயரும்  வெண்மேகங்கள்....
கார்மேகங்கள்  ஆகாதோ
பெரும் மழையாய் பொழியாதோ,   என...   
வயல்வெளியில்....காத்திருப்பில்....
கழனிவாழ் உழவன்!

மழை...வருமா  என வாட்டத்தில்
அசைவற்ற நாற்றுப் பயிர்கள்...
தன் உயிர் தண்ணீர்  தாகத்தவிப்பில்......
        - பிரேம்நசீர்.  31-12-2016. 







கருத்துகள் இல்லை: