வெள்ளி, 30 டிசம்பர், 2016

விலகா மய்யப் புள்ளி....
உன் நினைவுகள்.....என்னுள்
நிழலாடும் போது,
நிழலாய் நீ வந்தாய்
நினைவுகளில் நனைந்தபடி,

நீர் என்று  நான் நினைத்தேன்,
கானல் நீராய் ஆகிப் போனாய்.

என் நினைவுகளுக்குள்
நிண்டிக் கொண்டிருக்கும்...
நீ இல்லாமல் வாழ்கிறேன்
உன்னை நிழலாய்
என் கண்களுக்குள்
நிறைத்தப்படி.

எல்லாமே கடந்துப் போகும்,
ஆம் காலம் தான் முதலில்!

விட்டதைப் பிடிக்க,
அடுத்த வண்டிக்கு
காத்திருக்கவில்லை,
முதல் வண்டியை
தவற விட்டப் பின்.

பயணம் தொடர வில்லை!
திசையும் மாறவில்லை!

மெல்ல ஊர்கிறேன்.........
உன் நினைவுகளைத்
தொடர்ந்து,  வட்டமாய்.....
உன்னை மய்யப் புள்ளியாக்கி.......
உன் விலகலை வட்டமாக்கி,
அதில் பயணிக்கிறேன்.

எல்லா கோணங்களிலிருந்தும்
தொலைவுகள்  நீண்டாலும்,
வட்டம் மாறாது
நீயே, மய்யப்புள்ளியாய்!
-பிரேம்நசீர். 30-12-2016.









கருத்துகள் இல்லை: